சாலை விதியை மீறினால் புதிய அபராதம் – வந்தாச்சு நியூ ரூல்ஸ்.. கவனமாக இருங்க!
தமிழக போக்குவரத்து துறை விபத்துகளை தடுக்கும் நோக்கில் சாலை விதிகளை கடுமையாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சாலை விதிகளை மீறும் பட்சத்தில் வாகன ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள்:
தமிழக போக்குவரத்து துறை சார்பாக சாலை விதிகளை மக்கள் பின்பற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சிக்னலை மதிக்காமல் செல்வது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது மற்ற வாகனங்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் செல்வது உள்ளிட்ட விதி மீறல்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இயல்பு நிலைமைக்கு திரும்பிய மாநிலம் – 11 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு!
தற்போதைய விதியின் படி தீயணைப்பு வண்டி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. அதாவது இனி உங்கள் வண்டியை உங்கள் நண்பர் எடுத்து ஓட்டும் போது அவர் சாலை விதியை மீறினால் வாகனம் ஒட்டிய அவருக்கு தான் அபராதம் விதிக்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
பொதுவாக சாலையில் விதியை மீறும் போது வண்டி எண்ணை வைத்து வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும்..இத்தகைய சூழலில் வாகனத்தின் உரிமையாளரான நீங்கள் வண்டியை ஓட்டவில்லை என்பதற்கான ஆதாரத்தை காவல்துறையிடம் சமர்ப்பித்தால் அபராதம் நீக்கப்பட்டு வண்டியை ஓட்டிய நபர் மீது விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download