அஞ்சல் துறையில் 40,899 காலிப்பணியிடங்கள் – தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாமா? விவரம் இதோ!!
இந்திய தபால் துறையில் காலியாகவுள்ள 40,899 பணியிடங்கள் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. இப்பணியிடத்திற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த விளக்கத்தை இப்பதிவில் காண்போம்.
அஞ்சல் துறை வேலை:
இந்திய அஞ்சல் துறையில் GDS பதவிகளில் காலியாக உள்ள 40,899 பணியிடங்களுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடபட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் 3, 167 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
கூகுளின் இந்த AI சாட்போட்டால் 100 பில்லியன் டாலர் நஷ்டம் – கொடி கட்டி பறக்கும் Microsoft!
Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்கும் நபர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது Grades/Points அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும். இந்த நிலையில் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது சிலர் 10 ஆம் வகுப்புத் தேர்வை பள்ளிக்கு செல்லாமல் தனித் தேர்வர்வாக எழுதுவார்கள். இவர்களும் அஞ்சல் அலுவலக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக தேர்வு செய்யப்படுபவர்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் குறுஞ்செய்தி வாயிலாக விண்ணப்பதாரருக்கு தகவல் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.