மதுரை மக்களுக்கான ஹாப்பி நியூஸ்… ஒத்தக்கடை டு திருமங்கலம் மெட்ரோ ரயில் திட்டம் – அறிக்கை சமர்ப்பிப்பு!
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் மெட்ரோ இயக்குனர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் இவர் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து சூப்பரான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மெட்ரோ ரயில் திட்டம்
தற்போது மதுரையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை அரசு செயற்படுத்தி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம் வரை புதிய மேம்பாலம் கட்டுவதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழக ஊரக வளர்ச்சி துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!
இதில் கலந்து கொண்ட மெட்ரோ இயக்குனர் தெரிவித்துள்ளதாவது, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கை தற்போது மாநில அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய மற்றும் மாநிலம் அரசுகளின் ஒப்புதல் பெற்ற பிறகு இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி மதுரையில் ஒத்தக்கடை டு திருமங்கலம் இடையே 31 கிலோமீட்டர் வரை மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதில் 17 நிறுத்தங்கள் இடம்பெறும் என்றும் கோரிப்பாளையம் முதல் வசந்த நகர் இடையே சுரங்க ரயில் பாதை அமைக்கும் தேவை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த மூன்றாண்டுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.