மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் – 11,000 பேர் பணிநீக்கம்!!
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை ஒட்டுமொத்த ஊழியர்களில் 5 சதவீதத்தை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் பணிநீக்கம்
கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில், உலகளவிலான முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. பொருளாதார பின்னடைவுகள் மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்கங்கள் காணப்பட்டது. மறுபக்கத்தில், இந்த திடீர் பணிநீக்கங்கள் மூலம் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5 மருத்துவ பாடப்புத்தகங்கள் – முதல்வர் ஸ்டாலின் வெளியீடு!!
குறிப்பாக, டிவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி எலோன் மஸ்க், அதன் 50% ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அதே போல அமேசான் நிறுவனமும் 18 ஆயிரம் என்ற பெரிய அளவிலான பணிநீக்கங்களை அறிவித்திருந்தது. இந்த வரிசையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டும் தற்போது இணைந்துள்ளது. அதாவது, மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஒட்டுமொத்த ஊழியர்களில் 11,000 பேரை (5% பேர்) பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
இது குறித்த உறுதிப்படுத்தல்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து வெளிவரவில்லை என்றாலும், இந்த பணிநீக்கம் தொடர்பான தகவல்களை நிறுவனம் மறுக்கவில்லை. குறிப்பாக, புதிய பணிநீக்கங்கள் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் மனித வளத்துறை ஊழியர்கள் பெருமளவு பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.