ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் வாரத்தின் கடைசி நாளான இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 உயர்ந்துள்ளது. இன்றும் நாளையும் சுபமுகூர்த்த தினம் என்பதால் இந்த நேரத்தில் நகை விலை உயர்ந்திருப்பது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை:
இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் நுகர்வு எப்போதும் அதிகமாகவே இருக்கும். தங்கத்தை மக்கள் ஒரு வகையான கலாசார வழக்கமாகவும், சேமிப்பாகவும் கருதுகின்றனர். இந்த நேரத்தில் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது உயர்ந்த தங்கத்தின் விலை இன்று வரை குறையவே இல்லை.
Follow our Instagram for more Latest Updates
இதற்கு மத்தியில் உக்ரைன் ரஷ்யா போர், பொருளாதார மந்த நிலை, முதலீடு அதிகரிப்பு, பங்குச் சந்தை நிலவரம், ஜிஎஸ்டி வரி உயர்வு, இறக்குமதி வரி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினந்தோறும் தங்கத்தின் விலை மாற்றமடைந்து வரும் நிலையில் இன்று (டிச.10) தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 உயர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து ஒரு சவரன் ரூ.40,440க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.5,055க்கு விற்பனையாகி வருகிறது. அதனை தொடர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.73க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.