UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி முதன்மை தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இணையதளம் வாயிலாக தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPSC:
இந்தியாவில் ஆண்டுதோறும் IAS, IPS போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தி வருகிறது. இந்த தேர்வானது முதல் நிலை, முதன்மை தேர்வு, நேர்காணல் என 3 படிநிலைகளாக நடைபெறும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் தேர்வு காலை, மாலை என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த முதன்மை தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது.
TNPSC Reporter 2022: தேர்வில் அதிக Cut Off மதிப்பெண்கள் பெற – Test Pack!! உடனே வாங்குவீர்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தேர்வர்கள் தங்களது தேர்வின் முடிவுகளை https://www.upsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் UPSC மெயின் ரிசல்ட் என்பதனை கிளிக் செய்து பதிவெண்ணை உள்ளீட்டு உங்களது மதிப்பெண்களை எளிதாக அறியலாம். அடுத்த கட்டமாக நேர்காணல் நடைபெறக்கூடிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் யுபிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.