அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
இந்தியாவின், ஒடிசா மாநிலத்தில் கொரோனா பாதித்த அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வகையில் மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்தால் மேலும் விடுமுறை நீடிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு அறிவிப்பு:
கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த ஒன்றரை வருடங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கில் முடக்கப்பட்டது. இதனால் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியது. மேலும் இரண்டாவது அலை ஓய்ந்த பிறகு ஊரடங்கில் தளர்வு அளித்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
மாநிலம் முழுவதும் மீண்டும் இரவு ஊரடங்கு அமல், புதிய தளர்வுகள் – அரசு அதிரடி உத்தரவு!
இந்நிலையில் ஓமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கின. இதனால் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தமிழகம், மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உத்தரவு போடப்பட்டது. இந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் அதிகமான தினசரி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது ஒடிசா மாநிலத்தில் நேற்று 8,612 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மேலும் ஒடிசா மாநிலத்தில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது, அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை ஆறு வயது சிறுமி உள்பட 19 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஒடிசா அரசு, சிறப்பு தற்செயல் விடுமுறை 7 நாட்கள் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு அரசு ஊழியர்கள் , கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற மருத்துவர்களிடம் சான்றிதழ் வாங்கி அரசு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக அரசு அலுவலர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.