மாநிலம் முழுவதும் மீண்டும் இரவு ஊரடங்கு அமல், புதிய தளர்வுகள் – அரசு அதிரடி உத்தரவு!
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் முன்னர் இருந்ததை விட 30% அளவிற்கு குறைந்துள்ளதால் அங்கு இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 9 மணியில் இருந்து 10 மணி முதல் ஆரம்பித்துள்ளதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
ஒடிசா மாநில அரசு திங்களன்று பிப்ரவரி மாதத்திற்கான கோவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இரவு ஊரடங்கு உத்தரவை இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரை நீட்டித்தது, ஏனெனில் மாநிலத்தின் கோவிட் -19 பாதிப்பு விகிதம் அதன் முந்தைய நாளை விட 30 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. இதனால் சிறப்பு நிவாரண ஆணையர் (SRC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிப்ரவரி 1, 2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை, மாநிலத்தின் அனைத்து நகர்ப்புறங்களிலும் இரவு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் பிப்ரவரி 28 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் கிழமை நிலவரப்படி ஒடிசாவில் 3,329 கோவிட் -19 நோய் பாதிப்புகள் புதிதாக பதிவாகியுள்ளன. இது ஞாயிற்றுக்கிழமை 4,843 ஆக இருந்தது. மாநிலத்தில் 18 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 8,612 ஆக உள்ளது. அரசின் புதிய உத்தரவில், அனைத்து கடைகள், மால்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு வளாகங்கள், திரையரங்குகள், ஆடிட்டோரியங்கள், சட்டசபை அரங்குகள் மற்றும் இதே போன்ற இடங்கள் மாநிலம் முழுவதும் தினமும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – அரசின் வழிகாட்டுதல்கள்!
இரவு ஊரடங்கு உத்தரவின் போது, உணவு, மளிகை பொருட்கள், காய்கறிகள், முட்டை, மீன், இறைச்சி, பால் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை உணவகங்கள் மற்றும் Zomato மற்றும் Swiggy போன்ற வீட்டு விநியோகம் போன்ற சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது. ஆனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பை மாநில அரசு இன்னும் வெளியிடவில்லை. “ஒடிசாவில் தொற்று விகிதம் இன்னும் குறையவில்லை. ஓமைக்ரான் மாறுபாடு மற்றும் நோய்த்தொற்றின் விகிதம் எப்போது வேண்டுமானாலும் உயரலாம். மாநிலத்தின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒடிசாவில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன்” என்று பொது சுகாதார இயக்குனர் நிரஞ்சன் மிஸ்ரா கூறினார்.