தமிழக அரசில் மதிப்பூதியத்துடன் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தமிழ்நாடு, திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அமைப்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Chair Persons, Member பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DCPU வேலைவாய்ப்பு விவரங்கள்:
- குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அமைப்பில் சமீபத்தில் வெளியான அறிவிப்பில் Chair Persons, Member பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- மேலும் பணிக்கு தொடர்பான துறையில் 7 ஆண்டுகள் வரை பணியாற்றிய முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
TNPSC Coaching Center Join Now
- இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 31.12.2021 அன்றின்படி குறைந்த பட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க இயலும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பில் மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 30.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.