தமிழகத்தில் 34 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
தமிழகத்தில் அதிகரித்துள்ள ஓமைக்ரான் தொற்று இதுவரை 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
34 பேருக்கு தொற்று:
தமிழகத்தில் ஊரடங்குகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஓமைக்ரான் பரவல் தீவிரமடைய தொடங்கியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை தினங்கள் வர உள்ள நிலையில் கொண்டாட்டத்திற்காக மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதன் அடிப்படையில் மக்கள் பொது இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க தவறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்தமாக 236 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு வாரியத்தின் பயனாளிகள் கவனத்திற்கு – அரசு அறிவிப்பு!
இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி முதல் இரண்டு இடங்களில் உள்ளன. மகாராஷ்டிராவில் 65 பேருக்கு, டெல்லியில் 64 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியாகி இருந்தது. தற்போது தமிழகத்தில் ஒமைக்ரான் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் உறுதியான 34 பேரில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அதில் ஒருவர் கேரளாவிலிருந்து வந்தவர்.
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – நாமினி அப்டேட் அவசியம்! முழு விபரங்கள் இதோ!
தமிழகம் ஓமைக்ரான் பாதிப்பு பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ஓமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நபர்களில் 60 பேருக்கு முடிவுகள் வந்துள்ளனர். அதில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. இன்னும் 24 பேருக்கான ஒமைக்ரான் முடிவு வரவேண்டி உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் ஓமைக்ரான் பாதித்த 34 பேருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மாவட்ட அடிப்படையில் சென்னையில் 26 பேர், மதுரையில் 4, திருவண்ணாமலையில் 2, சேலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விமான பயணிகள் மூலம் தான் ஓமைக்ரான் தீவிரமடைகிறது என்பதால் விமான நிலையங்களை கண்காணிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.