‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகியதற்கு இது தான் காரணம்? மனம் திறந்த அகிலன்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விலகிய நடிகர் அகிலன் சீரியலை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
நடிகர் அகிலன்
தமிழ் சின்னத்திரை சீரியல்களில் அதிகளவு பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து முன்னணி இடத்தை வகித்திருக்கும் முக்கிய சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஆரம்பம் முதலே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இடையில் சில ஏற்ற, இறக்கங்களை ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சந்தித்து வந்தாலும், தனக்கான ரசிகர்களை தக்கவைத்து TRP ரேட்டிங்கிலும் அடிக்க முடியாத ஒரு இடத்தை பெற்றிருக்கிறது.
Vijay TV Bigg Boss 5 Promo 2 | அக்ஷராவிடம், பிரியங்கா எப்படி? என கேட்ட கமல்ஹாசன்!
இப்படி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நன்றாக ஓடிக்கொண்டிருந்த சமயத்தில், இதில் அகிலன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் அகிலன் சீரியலில் இருந்து திடீரென விலகினார். இத்தொடரில் அகிலன் மற்றும் அஞ்சலி என்ற கதாப்பாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்று வந்த நடிகர் அகிலனின் விலகல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. சீரியலில் இருந்து விலகியதற்கு பின்பாக திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகர் அகிலன் மீண்டுமாக நடிகை ஸ்வீட்டியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
புதிய கார் வாங்கிய விஜய் டிவி ‘வேலைக்காரன்’ சீரியல் பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து!
அதாவது, அகிலன் மற்றும் ஸ்வீட்டியின் நடிப்பில் ‘ஹோரா’ என்கிற ஆல்பம் இசை ஒன்று வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக இருவரும் அளித்துள்ள பேட்டியில், சினிமா வாய்ப்புக்காக தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகியதாக கூறிய அகிலன் இவரது விலகளுக்கு பிறகு சீரியல் நன்றாக போவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘பாரதி கண்ணம்மா’ கதையில் இருந்து கண்ணம்மா அல்லது வேறு யாராவது விலகி இருந்தாலும் அந்த கதை உறுதியாக இருப்பதால் எப்படி இருந்தாலும் ரசிகர்களுக்கு இது பிடிக்கும் என்று நடிகர் அகிலன் கூறியுள்ள வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.