இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? ஓமிக்ரான் அச்சம் எதிரொலி! மத்திய அரசின் விளக்கம்!
நாட்டில் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்றின் உருமாறிய ஓமிக்ரான் வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருவம் நிலையில், மத்திய அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
மீண்டும் ஊரடங்கு:
நாடு முழுவதும் 125 கோடிக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசி இலக்கு நிர்வகிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 தடுப்பூசியின் 125 கோடி டோஸ்களை வழங்கியுள்ளதாகவும், மொத்த வயது வந்தோரில் 84 சதவீதம் பேர் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் மற்றும் 49 சதவீத மக்கள் இரு டோஸ்களிலும் தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? வெளியான தகவல்!
தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இந்த வகை தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் கொரோனா வைரஸின் புதிய வகை ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் மக்கள் அது குறித்து பீதியடைய வேண்டாம் என்றும், ஆனால் கோவிட்-19 பொருத்தமான நடத்தையைப் பின்பற்றவும், தாமதமின்றி தடுப்பூசி போடவும் என்று சுகாதார அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு 2022 – அரசின் முக்கிய அறிவிப்புகள்!
மேலும், INSACOG நெட்வொர்க் மூலம் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகள் அனைத்தும் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். SARS-CoV-2 இன் ஓமிக்ரான் மாறுபாட்டின் 373 வழக்குகள் இதுவரை 29 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்தியா தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. நிதி ஆயோக்கின் உறுப்பினர்-சுகாதார டாக்டர் விகே பால் அவர்கள் மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வேண்டிய தேவையில்லை என்றும் சவாலை எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளது என்று உறுதியளித்துள்ளார்.
மேலும் மக்கள் அனைத்து நேரங்களிலும் முகக்கவசத்தை அணிய வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் குறித்து ஓமிக்ரான் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் டாக்டர் பால் கூறியுள்ளார். ஓமிக்ரான் மாறுபாடு கவனமாக ஆராயப்படுகிறது, அதன் அடிப்படையில் நமது தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வட்டாரங்களுக்குள் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்றும், பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்கான அறிவியல் காரணம், அவற்றின் அளவுகளின் நேரம் ஆகியவை ஆய்வுக்கு உட்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.