மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? வெளியான தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறும் வயதினை 2 ஆண்டுகள் அதாவது 60 வயதிலிருந்து 62 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
ஓய்வு பெறும் வயது உயர்வு:
மத்திய அரசு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அகவிலைப்படியானது கடந்த ஜூலை மாதத்தை முன் தேதியிட்டு வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பானது மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சிறப்பு போனஸ் போன்று அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Airtel வாடிக்கையாளர்களுக்கு Disney+ Hotstar ரீசார்ஜ் திட்டங்கள் – ஒரு வருட வேலிடிட்டி!
மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சம்பள உயர்வு வழங்கியது. அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பள உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறும் வயதை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு 2022 – அரசின் முக்கிய அறிவிப்புகள்!
அதாவது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58 லிருந்து 60 ஆக 1998ம் ஆண்டு நீட்டித்து அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இப்போது தான் ஓய்வு பெறும் வயதை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் முறையான அறிவிப்பானது இந்தாண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.