தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு 2022 – அரசின் முக்கிய அறிவிப்புகள்!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு முறையே வழங்குவதை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு:
தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பரிசுப் பணமும் இதுவரை வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளதால் ரொக்கப்பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவியது. மக்களின் குழப்பத்தை தீர்க்கும் வகையில் திமுக தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி – அரசாணை வெளியீடு!
அந்த வகையில் தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை மற்றும் சில மளிகை பொருட்களுடன் துணிப்பை அடங்கிய 20 பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ஒரு முழு கரும்பு சேர்த்து வழங்க ரூ.71.10 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA 28% அதிகரிப்பு – இரட்டை போனஸ் வாய்ப்பு!
மேலும் இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பு ரேஷன் கடைகளில் முறையாக வழங்குவதை கண்காணிக்க தமிழக அரசு ஆட்சியர் தலைமையில் குழு அமைத்துள்ளது. அத்தகைய மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவில் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர்கள் மற்றும் வேளாண் இணை இயக்குநர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.