மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA 28% அதிகரிப்பு – இரட்டை போனஸ் வாய்ப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது 28% வழங்கப்பட்ட நிலையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை அடுத்த தவணைக்கான DA உயர்வு குறித்து அறிவித்துள்ளது. அதன்படி DA 31% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு வாடகை படியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
HRA அலவன்ஸ்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கடந்த தவணை வரை 28% ஆக உயர்த்தப்பட்டது. இந்த அரசு கொரோனா கால பொருளாதார சிக்கல் காரணமாக மூன்று தவணைகளாக நிலுவையில் வைத்திருந்தது. தொடர்ந்து ஊழியர்கள் கோரிக்கை வைத்து 17% ஆக இருந்த அகவிலைப்படி உயர்வானது 11% அதிகரிக்கப்பட்டு மொத்தம் 28% ஆக வழங்கப்பட்டது. அதன் பின்னர் தற்போதைய ஜூலை 1, 2021க்கான தவணையை மத்திய அரசு பண்டிகையை ஒட்டி அறிவித்தது. இதனால் நவம்பர் மாத ஊதியத்துடன் அந்த DA உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புது வீட்டுக்கு குடியேறிய மூர்த்தி, தனம்? ரசிகர்கள் ஷாக்!
டிஏ உயர்த்தப்பட்டதை அடுத்து, தற்போது ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. தற்போது மேலும் ஒரு கொடுப்பனவை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதவாது வீட்டு வாடகை படியும் 28% அதிகரித்துள்ளது. விதிகளின் படி, அகவிலைப்படி 25%க்கு மேல் இருந்தால் HRA தானாகவே திருத்தப்படும். மத்திய ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) மாற்றம் அகவிலைப்படியின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களும் உயர்த்தப்பட்ட HRA பலனைப் பெறத் தொடங்கியுள்ளனர்.
டிசம்பர் 6 முதல் 1 – 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
ஊழியர்கள் குடியிருந்து வரும் நகரங்களை மக்கள் X, Y மற்றும் Z என்று மூன்று வகைகளாக பிரித்துள்ளனர்.அதன்படி முறையே நகரத்தின் வகைக்கு ஏற்ப, 27 சதவீதம், 18 சதவீதம், 9 சதவீதம் எச்ஆர்ஏ வழங்கப்பட்டுள்ளது. 28% DA உயர்வு அடிப்படையில், HRA ஜூலை 1, 2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் 31% DA அடிப்படையில் HRA இன்னும் அதிகரிக்கப்படவில்லை. X பிரிவில் வரும் ஊழியர்களுக்கு இப்போது மாதத்திற்கு ரூ.5400க்கு மேல் HRA கிடைக்கும். இதன்பின், Y வகுப்பிற்கு மாதம் ரூ.3600, Z வகுப்பிற்கு மாதம் ரூ.1800 என்று வழங்கப்பட்டு வருகிறது. இவை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து அதிகரிக்கப்படுகிறது.