டிசம்பர் 6 முதல் 1 – 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
புதுச்சேரியில் டிசம்பர் 6ம் தேதி முதல் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து மாணவர்களின் கல்வி நிலை கருதி கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் கட்டமாக 9-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 1ம் தேதி 1- 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியிலும் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றுவதால் அங்கும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
மேலும் நவம்பர் 1ம் தேதி 1- 8 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட விருந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக நவம்பர் 8ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி முழுவதும் கனமழை பெய்து வந்ததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. சாலைகளில் தேங்கிய மழை நீரால் பொது மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருந்தனர்.
தடுப்பூசி போடாதவர்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!
அதனால் 1-8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது மழை குறைந்து புதுச்சேரியில் இயல்பு நிலை திரும்புவதால் 1-8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 6ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.