தடுப்பூசி போடாதவர்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!
ஜெர்மனியில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் இருக்கும் காரணத்தால் தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா 4ம் அலையை தடுக்க முடியும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு:
கடந்த வருடம் முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. கட்டுக்கடங்காமல் பரவிய வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஆனாலும் வைரஸ் பரவல் குறையவில்லை கொரோனா வைரஸ் அடுத்தடுத்த நிலைகளா உருவெடுத்து இரண்டாம் அலை, மூன்றாம் அலை என தொடர்ந்து பரவியது. இந்த தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு 2 டோஸ் மக்களுக்கு செலுத்தப்படுகிறது.
WhatsApp இல் வரப்போகும் சூப்பர் அப்டேட் – தவறாக அப்டேட் ஆன ஸ்டேட்டஸை உடனே நீக்கலாம்!
இதன் விளைவாக வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில் அனைத்து நாட்டு அரசுகளும் மக்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஐரோப்பா நாடான ஜெர்மனியில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5000 – பணிகள் தொடக்கம்! பொதுமக்கள் மகிழ்ச்சி!
தினசரி கொரோனா பாதிப்பு, 60 ஆயிரத்தை தாண்டி மக்களிடம் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஜெர்மனி அரசு தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு ஊரடங்கை விதித்துள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். என்று அரசு அறிவித்துள்ளது. இது போன்ற கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தொற்றின் நான்காவது அலையை தடுக்க முடியும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.