CBSE முதற்கட்ட தேர்வு அட்டவணை வெளியீடு 2021 – 36 லட்சம் பேர் பதிவு!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதற் பருவத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு நேரம் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முதற் பருவத் தேர்வு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது தொடர்ந்து மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வை எழுத 36 லட்சம் மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை காட்டிலும் 4 லட்சம் மாணவ மாணவியர் கூடுதலாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
TCS, Infosys, Wipro, HCL நிறுவனங்களின் முக்கிய திட்டம் – முடிவுக்கு வரும் Work From Home நடைமுறை?
தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதற் பருவத் தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வை இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வுகளை ஒரே கட்டமாக நடத்தினால் மாணவ மாணவியர் தேர்வு எழுத சிரமப்பட நேரிடும் என்பதால் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
WhatsApp குரூப் காலில் இடையில் சேர்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
முதற்கட்ட தேர்வுக்கான அட்டவணை சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில் 10ம் வகுப்பு தேர்வு நவம்பர் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 9ம் தேதி வரையும், 12ம் வகுப்பு தேர்வு டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரையும் நடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 7 ஆயிரமாக இருந்த தேர்வு மையங்களை தற்போது 14 ஆயிரமாக அதிகரித்துள்ளது. முதல் கட்ட தேர்வு 90 நிமிடங்கள், இரண்டாம் கட்ட தேர்வு 120 நிமிடங்கள் நடக்கும் என்றும் முதல் கட்டத்துக்கான செய்முறைகள் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.