நவம்பர் 8 வரை 144 தடை உத்தரவு அமல் – காவல்துறை அறிவிப்பு!
உத்தரபிரதேசத்தில் வரவிருக்கும் பண்டிகை மற்றும் வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளின் எதிர்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை 144 இன் கீழ் புதிய கட்டுப்பாடுகளை லக்னோ காவல்துறை அறிவித்துள்ளது.
144 கட்டுப்பாடுகள்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சுகாதார அமைப்பு மக்களின் ஒத்துழைப்பாலும் ஊரடங்காலும் தொற்றை குறைக்க முடியும் என்று கூறியது. எனவே அதன் அறிவுறுத்தலின் பேரில் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்குகளை அமல்படுத்தி மக்கள் வெளியே செல்ல தடை விதித்தது. மேலும் தடுப்பு பணியாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – WHO தகவல்!
மேலும் பண்டிகை காலங்களில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது முக்கியம். இந்த நேரங்களில் மக்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளது. அதனால் மென்மேலும் தொற்று அதிகரிக்கும். எனவே உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வரவிருக்கும் பண்டிகை மற்றும் வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளின் எதிர்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை 144 இன் கீழ் புதிய கட்டுப்பாடுகளை லக்னோ காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்.6, 9ம் தேதிகளில் கல்லூரிகளுக்கு விடுமுறை – அண்ணா பல்கலைக்கழகம்!
நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை ஒன்று திரட்டுவதை தடை செய்ய மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக்கு அருகில் அனைத்து ஆர்ப்பாட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேச அரசால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் அரசின் வழிகாட்டுதல்களை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்து உள்ளது.