கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – WHO தகவல்!
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் கோவாக்சின் அங்கீகாரம் குறித்து அடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என WHO அறிவித்துள்ளது.
தடுப்பூசி அங்கீகாரம்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதில் விழிப்புணர்வு மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் அக்.6, 9ம் தேதிகளில் கல்லூரிகளுக்கு விடுமுறை – அண்ணா பல்கலைக்கழகம்!
கோவாக்சின் தடுப்பூசி ஆனது இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இந்த தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிக்காதது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தடுப்பூசியானது பன்னாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்படும் தடுப்பூசி பட்டியலிலும் இணைக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்க கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பணியிட மாறுதல் கலந்தாய்வு!
இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கான அவசர கால பயன்பாட்டு அங்கீகாரம் குறித்து அக்.6ம் தேதி முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தது. ஆனால் தற்போது கோவாக்சின் அங்கீகாரம் குறித்து அடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. எனவே கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளிக்குமா என்பது குறித்து பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.