TN TRB முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வயது வரம்பு – அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வயது வரம்பை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வயது வரம்பு
தமிழகத்தில் தற்போது கொரோனா 2ம் அலை தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் TNPSC போட்டித்தேர்வுகளை நடத்துவதற்கு அரசு ஆலோசித்துள்ளது. இதற்கிடையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வயது வரம்பை நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
நவம்பர் 8 வரை 144 தடை உத்தரவு அமல் – காவல்துறை அறிவிப்பு!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 2207 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட இருக்கும் நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் துவங்கியுள்ளன. இந்த விண்ணப்ப பதிவு இம்மாதம் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வில் 42 வயதை கடந்த பட்டதாரிகள் கலந்து கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது சமூக அநீதியாகும்.
இந்த ஆசிரியர் பணிகளுக்கு வயது வரம்பை நிர்ணயிப்பது நியாயமற்றது. அதாவது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்களை தேர்வு செய்யும் ஆசிரியர் தேர்வு வாரியம், அப்பணிக்கு எவ்வித வயது வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. இன்றைய காலகட்டத்தில் முதுநிலைப் பட்டம் பெறுவதற்கு கிட்டத்தட்ட 28 வயது வரை ஆகிறது. இதையடுத்து 14 ஆண்டுகளில் அதிகபட்சமாக 3 அல்லது 4 முறை மட்டுமே முதுநிலை பட்டதாரிக்கான தேர்வும், பணி நியமனமும் நடைபெறும்.
தமிழகத்தில் உள்ள உயர்நிலை வகுப்புகளில் 19 மாணவர்களுக்கு 1 என்ற வீதத்திலும், மேல்நிலை வகுப்புகளில் 27 மாணவர்களுக்கு 1 என்ற வீதமும் ஆசிரியர்கள் இருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால் தமிழகத்தின் பல பள்ளிகளில் 50 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் கூட இல்லாத நிலை காணப்படுகிறது. அதனால் ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்க அரசுக்கு உரிமை இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – WHO தகவல்!
இப்போது தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்குரிய கல்வித் தகுதி உடைய லட்சக்கணக்கானவர்கள் 42 வயதைக் கடந்தவர்கள் தான். இப்படி ஒவ்வொரு முறையும் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொண்டு ஆசிரியர் ஆகலாம் என காத்திருக்கும் பலருக்கு, இந்த வயது வரம்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, ஆசிரியர் பணிக்கு விதிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து அரசு தளர்வு அளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைபாட்டையும் ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு நிலைபாட்டையும் எடுக்காதீர்கள். பலருடைய வாழ்வு இதில் அடங்கும்.