தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு – இன்று முதல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக மூடப்ப்பட்டிருந்த அங்கன்வாடி மையங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள மதிய உணவு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்கள்:
தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்த காரணத்தால் அரசு முழு ஊரடங்கை பிறப்பித்தது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நோய் தடுப்பு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மற்றொரு புறம் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. அதனால் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
இனி வாரத்தில் 3 மணிநேரம் மட்டுமே வீடியோ கேம் – இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!
அதனை தொடர்ந்து இரண்டு வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதற்காக அங்கன்வாடி மையங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. குழந்தைகளை பெற்றோர் அல்லது பாதுகாவலர் பொறுப்பில் காலை 11.30 மணிமுதல் 12.30 மணிக்குள் அழைத்து வந்து, அங்கன்வாடி மையங்களில் மதிய உணவு உட்கொள்ள செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கன்வாடி மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி அங்கன்வாடி மையத்தில் சூடான சமைத்த மதிய உணவு காலை 11.30 முதல் மதியம் 12.30 வரை வழங்கப்பட வேண்டும். அங்கன்வாடிப் பணியாளர்கள் அங்கன்வாடி மையத்தில் நுழையும்போது தங்களது கைகளை வரையறுக்கப்பட்ட முறையில் சோப்பு கொண்டு 40 நொடிகள் கழுவி நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். கட்டாயமாக முகக்கவசத்தினைச் சரியான முறையில் அணிய வேண்டும் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.