இனி வாரத்தில் 3 மணிநேரம் மட்டுமே வீடியோ கேம் – இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!
சீனாவில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கேம் விளையாட புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன் படி குழந்தைகள் இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும் என சீனாவின் வீடியோ கேம் ஒழுங்குமுறை ஆணையமான, நேஷனல் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
கேம் கட்டுப்பாடுகள்:
உலகளவில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் வீடுகளில் இருக்கும் குழந்தைகள் கேம் விளையாட ஆரம்பித்து நாளடைவில் அதுவே அவர்களை அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிறு குழந்தைகள் பார்வை குறைபாடு, தசை நார் குறைபாடு போன்றவற்றிற்கு ஆளாகி உள்ளனர். இதனை தடுக்க சீனாவின் வீடியோ கேம் ஒழுங்குமுறை ஆணையமான நேஷனல் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு புதிய உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2 மாடிக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்புகளில் ‘இது’ கட்டாயம் – சிறப்பு அறிவிப்புகள்!
அதன் படி, கடந்த 2018ல் கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு புதிய வீடியோ கேம்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சீனாவின் வீடியோ கேம் நிறுவனங்களான நெட்ஈஸ், டென்சென்ட் (NetEase, Tencent) ஆகியன வெகுவாக பாதிக்கப்பட்டன. அதன் பின்னர் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வார நாட்களில் ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் வீடியோ கேம் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இரவு 10 மணி தொடங்கி காலை 8 மணி வரை வீடியோ கேம் விளையாட கூடாது என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிய விதிமுறைகளை அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த புதிய விதிமுறை இன்று (செப்.1) முதல் அமலுக்கு வருகிறது. புதிய விதிகளின் படி, சீன குழந்தைகள் இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும். 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே 18 வயதுக்கு குறைவானோர் வீடியோ கேம் விளையாட முடியும். தேசிய விடுமுறை நாட்களில் இதே நேரத்தில் விளையாடலாம். மேலும் 8 வயதுக்கு கீழ் உள்ளோர் தங்களின் உண்மையான பெயர், விவரங்களை அளித்தால் மட்டுமே வீடியோ கேம் விளையாட்டு பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.