சட்டசபை பொன்விழா நாயகன்’ முதல்வர் புகழாரம் – கண்ணீர் விட்ட துரைமுருகன்!
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் 50 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்து பொன் விழா கொண்டாட இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் புகழாரம் சூட்டினார்.
பொன்விழா நாயகன்:
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சில நாட்களுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு திங்கள் கிழமையான இன்று சட்டசபை கூட்டத்தொடர் முதல்வர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் தொடங்கியது. இதில், நீர்வளத்துறை விவாதம் தொடங்கும் முன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அத்துறையின் அமைச்சராக உள்ள துரைமுருகனை பாராட்டி பேசினார். அப்போது நெகிழ்ச்சியில் துரைமுருகன் கண் கலங்கினார்.
கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் தலிபான்கள் – ஆப்கான் அணிக்கு புதிய சேர்மன் நியமனம்!
இதில் முதல்வர் பேசுகையில், சட்டசபையின் நூற்றாண்டு கால வரலாற்றில் 50 ஆண்டுகள் சபை உறுப்பினராக இருந்து பொன்விழா கொண்டாட உள்ளார் துரைமுருகன். மேலும் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதியிடம் பற்றும், பாசமும் கொண்டவர். அவரும் இவரிடத்தில் அப்படியே நடந்து கொண்டார். இத்தனை வருட திமுக வரலாற்றில் அனைத்து வளர்ச்சி மற்றும் வீழ்ச்சிகளில் இவரது பங்கு மிகப் பெரியது. தலைவர் கலைஞர் இடத்தில் இவர் மணிக்கணக்கில் பேசுவதை பார்த்து பொறமை அடைந்திருக்கிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி, கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகன் இறப்புக்குப் பிறகு அவர்களது இடத்தில் துரைமுருகனை வைத்துப் பார்க்கிறேன். திமுக – என்ற கட்சி மற்றும் ஆட்சியில் இவரது பங்கு என்றென்றும் தொடரும் என புகழாரம் சூட்டினார்.
TN Job “FB Group” Join Now
இதனை அடுத்து முதல்வருக்கு நன்றி கூறிய துரைமுருகன், “முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்று கூறி கண் கலங்கினார். இதனை அடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் அவை முன்னவராக உள்ள துரைமுருகன் “அனைவரிடத்திலும் ஒரே மாதிரி பழகக் கூடியவர்” என்று பாராட்டினார். இதையடுத்து திமுக -வின் கூட்டணி கட்சிகளும், பாஜக போன்ற எதிர்க்கட்சிகளும் சட்டசபை பொன்விழா நாயகன் துரைமுருகனை பாராட்டு மழையில் நனைய செய்தனர்.