சாலையோர வியாபாரிகளுக்கு 7% வட்டி மானியத்துடன் கடன் – மத்திய அரசு விளக்கம்!
கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 7 சதவீத வட்டி மற்றும் மானியத்துடன் கூடிய கடன் உதவியை வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடன் தொகை
தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் பிற உதவிகள் வழங்குவது தொடர்பாக எழுபட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் கவுஷல் கிஷோர் பதிலளித்துள்ளார். அதில், கொரோனா 2 ஆம் அலை தாக்கம் காரணமாக மாநிலங்கள் தோறும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதால் சாலையோரங்களில் கடைகள் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு தொழில் செய்யும் வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு – முழு விபரம் இதோ!
இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பார் நிதி அறிவிக்கப்பட்டு, அவர்களது தொழிலை மேம்படுத்துவதற்கான கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் நாடு முழுவதும் உள்ள சுமார் 125 நகரங்களில், சாலையோர வியாபாரிகளது குடும்பத்தினரின் சமூக, பொருளாதார நிலைகளைஆய்வு செய்வதற்கான பணிகளை 2021, ஜனவரி 4 முதல் மத்திய அரசு துவங்கியது. அந்த அடிப்படையில் இம்மாதம் 18 ஆம் தேதி வரை ஒடிசா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 4,377 மற்றும் 5,673 நபர்களது தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
இவர்கள் அனைவருக்கும் ரூ.10 ஆயிரம் கடனாக வழங்கப்பட்டு, அதை திரும்ப செலுத்துவதற்கு ஒரு ஆண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடனை முறையாக செலுத்தியவர்களுக்கு தவணை அடிப்படையில், 20 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கடனாக கொடுக்கப்படுவதோடு, ஒவ்வொரு காலாண்டிலும் 7 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. மேலும் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றத்தை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் மாதந்தோறும் ரூ.100 வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படுகிறது.