பேஸ்புக் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய வசதி அறிமுகம்!!
மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய வசதியை பற்றியது ஆகும்.
பேஸ்புக் அறிவிப்பு:
மக்கள் தற்போது கொரோனா பரவல் காரணமாக வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் சமூக வலைத்தளங்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதிக பயனர்களை கொண்ட பேஸ்புக் நிறுவனம் Read First என்ற வசதியை சோதனை முறையில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலமாக பேஸ்புக்கில் பதிவு செய்த லிங்குகளை படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர முடியாது.
மே 12ம் தேதி முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
பயனர்கள் ஒரு செய்தியையோ அல்லது தலைப்பையோ மற்றவர்களுக்கு பகிர நினைத்தால் அப்போது முழுமையாக படிக்க வேண்டும் என்ற செய்தி பாப் திரையில் தோன்றும், இந்த வசதி மூலமாக பயனர்கள் முழுமையாக ஒரு செய்தியை படிக்கவும், போலி தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவும் வழிவகை செய்கிறது.
TN Job “FB Group” Join Now
உலகையே முடக்கியுள்ள இந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்களின் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நேரத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. மேலும் தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளவும் இது வழிவகை செய்கிறது.