மே 12ம் தேதி முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக நாளை (மே 10) முதல் மே 22ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காலை 6 மணி முதல் 10 மணி வரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய அரசு மாநிலங்களில் உள்ள நிலையைப் பொறுத்து கட்டுப்பாடுகளை விதித்து கொள்ள அனுமதியளித்துள்ளது. இதனால் பல மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 – டோக்கன் விநியோகம் மும்முரம்!!
தெலுங்கானா மாநிலத்தில் திடீரென்று கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் மாநில முதல்வர் மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். முழு ஊரடங்கு அறிவித்தால் அது மாநிலத்தின் வருவாயை பாதிக்கும் என்பதால் மிகவும் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த வாரம் தான் அரசு கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த பகுதி நேர ஊரடங்கு அல்லது முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பில்லை என்று அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும், தொடர்ந்து தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை அதாவது மே 12 முதல் மே 22ம் தேதி வரை 10 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் அலுவலகம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், ஊரடங்கு காலத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.