இன்று முதல் மே 17 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!!
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று முதல் வரும் மே 17 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாநில அரசு ஏற்கனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு உத்தரவு:
இந்தியாவில் கடந்த 15 நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிப்படைந்தும், 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்து வருகின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் வரும் மே 17 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 4,14,188 பேருக்கு கொரோனா – 3,915 பேர் மரணம்!!
அதே போல் அந்த மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்து கொண்டு நெகடிவ் என்று வந்தால் மட்டுமே வேறு மாநிலத்தவர் அந்த மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், மருத்துவமனைகள், மளிகை கடைகள் மட்டுமே திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொண்டு தான் வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு நாளைக்கு உச்சபட்சமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமாகமானவர்கள் கொரோனா தாக்கத்தால் பாதிப்படைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்