இந்தியாவில் ஒரே நாளில் 4,14,188 பேருக்கு கொரோனா – 3,915 பேர் மரணம்!!
இந்தியாவில் தொடர்ந்து 15வது நாளாக இன்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது. மேலும் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா பரவல்
நமது நாட்டில் தொடர்ந்து கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவில் தான் தற்போது பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டு வருகின்றது. உலக அளவில் ஒப்பிடும் போது நான்கில் ஒருவர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 14 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேலாக பதிவாகி வந்த நிலையில் இன்றும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 4,14,188 என்று உள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் அறிவிப்பிற்கு எதிர்பார்ப்பு!!
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,14,91,598 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் நேற்று மட்டும் 3,915 பேர் இந்த நோய் பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 2,34,083 என்று உயர்ந்துள்ளதாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் இந்த நோய் தாக்கத்தில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,31,507 என்று பதிவாகி உள்ளது. அதே போல் நாட்டில் இந்த நோய் தாக்கத்தில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,76,12,351 என்று பதிவாகியுள்ளது.
தற்போது இந்தியாவில் மட்டும் 36,45,164 பேர் மருத்துவமனையில் இந்த நோய் தாக்கத்திற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் பாதிக்கப்படுவோர் விகிதம் 81.95 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 16,49,73,058 பெருகும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்