தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி!!
தமிழகத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,800க்கு அதிகமாக உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குவது என்பது இதுவரை இல்லாத உச்சமாக உள்ளது. பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல பிரபலங்களை இந்த ஆண்டு நாம் இழந்துள்ளோம். இந்நிலையில் கொரோனா தொற்று நேரத்தில் களப்பணியாற்றிய விராலிமலை அதிமுக சட்டசபை உறுப்பினர் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் அறிவிப்பிற்கு எதிர்பார்ப்பு!!
இது குறித்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் என்னை வீட்டில் நானே தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும் அனைவரும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்”, இவ்வாறு தெரிவித்துள்ளார்.