தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் அறிவிப்பிற்கு எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் தற்போது புதிய முதல்வராக பதவி ஏற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் முழு ஊரடங்கு குறித்து அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடு விதிகளை கடுமையாக அமல்படுத்தியுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு அமலில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதே போல நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட முடியாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் போது அரசு கூடுதல் கவனிப்பு செலுத்தியது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டாலும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அழகப்பா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – மே 6 வெளியீடு!!
இதனால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள தமிழகத்தின் முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.