பாரதிதாசனின் புகழ் பெற்ற நூல்கள்
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 – ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
பாரதிதாசன் படைப்புகள் பல அவர் வாழ்ந்தபொழுதும் அவரின் மறைவிற்குப் பின்னரும் நூல்வடிவம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்:
பாரதிதாசன் புகழ் பெற்ற நூல்கள்:
வ.எண் | நூலின் பெயர் | ஆண்டு | நூலின் வகை | குறிப்பு |
---|---|---|---|---|
1 | அகத்தியன்விட்ட புதுக்கரடி | 1948 | காவியம் | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
2 | சத்திமுத்தப்புலவர் | 1950 | நாடகம் | |
3 | இன்பக்கடல் | 1950 | நாடகம் | |
4 | அமிழ்து எது? | 1951 | கவிதை | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
5 | அமைதி | 1946 | நாடகம் | |
6 | அழகின் சிரிப்பு | 1944 | கவிதை | |
7 | இசையமுது (முதலாம் தொகுதி) | 1942 | இசைப்பாடல் | |
8 | இசையமுது (இரண்டாம் தொகுதி) | 1952 | இசைப்பாடல் | |
9 | இந்தி எதிர்ப்புப் பாடல்கள் | 1948 | இசைப்பாடல் | |
10 | இரணியன் அல்லது இணையற்ற வீரன் | 1939 | நாடகம் | 1934 – செப்டம்பர் 5ஆம் நாள் பெரியார் தலைமையில் அரங்கேற்றப்பட்டது. |
11 | இருண்டவீடு | 1944 | காவியம் | |
12 | இலக்கியக் கோலங்கள் | 1994 | குறிப்புகள் | ச. சு. இளங்கோ பதிப்பு |
13 | இளைஞர் இலக்கியம் | 1958 | கவிதை | |
14 | உலகம் உன் உயிர் | 1994 | கவிதை | வெவ்வேறு இதழ்களில் எழுதிய தலையங்கக் கவிதைகள். ச. சு. இளங்கோ பதிப்பு |
15 | உலகுக்கோர் ஐந்தொழுக்கம் | 1994 | கட்டுரைகள் | ச.சு.இளங்கோ பதிப்பு. தலையங்கக் கட்டுரைகள் |
16 | எதிர்பாராத முத்தம் | 1938 | கவிதை | |
17 | எது இசை? | 1945 | சொற்பொழிவு | பாரதிதாசனும் பிறரும் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு |
18 | ஏழைகள் சிரிக்கிறார்கள் | 1980 | சிறுகதைகள் | ச. சு. இளங்கோ பதிப்பு. |
19 | ஏற்றப் பாட்டு | 1949 | இசைப்பாடல் | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
20 | ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது | 1978 | இசைப்பாடல் | த.கோவேந்தன் பதிப்பு |
21 | கடற்மேற் குமிழிகள் | 1948 | காவியம் | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
22 | கண்ணகி புரட்சிக் காப்பியம் | 1962 | காவியம் | |
23 | கதர் இராட்டினப்பாட்டு, | 1930 | இசைப்பாடல் | |
24 | கவிஞர் பேசுகிறார் | 1947 | சொற்பொழிவு | அன்பு ஆறுமுகம் என்பவரால் தொகுக்கப்பட்டது |
25 | கழைக்கூத்தியின் காதல் | 1951 | நாடகம் | |
26 | கற்கண்டு | 1945 | நாடகம் | பாரதிதாசன் நாடகங்கள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது |
27 | காதலா? கடமையா? | 1948 | காவியம் | |
28 | காதல் நினைவுகள் | 1944 | கவிதை | |
29 | காதல் பாடல்கள் | 1977 | கவிதை | த.கோவேந்தன் பதிப்பு |
30 | குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி | 1942 | காவியம் | |
31 | குடும்ப விளக்கு - 2ஆம் பகுதி: விருந்தோம்பல் | 1944 | காவியம் | |
32 | குடும்ப விளக்கு - 3ஆம் பகுதி: திருமணம் | 1948 | காவியம் | |
33 | குடும்ப விளக்கு - 4ஆம் பகுதி: மக்கட்பேறு | 1950 | காவியம் | |
34 | குடும்ப விளக்கு - 5ஆம் பகுதி: முதியோர் காதல் | 1950 | காவியம் | ஐந்துபகுதிகளும் இணைந்த பதிப்பு பின்னாளில் வந்தது. |
35 | குமரகுருபரர் | 1992 | நாடகம் | 1944ஆம் ஆண்டில் இந்நாடகம் 1992ஆம் ஆண்டில் தமிழ்நாடனால் பதிப்பிக்கப்பட்டது |
36 | குயில் பாடல்கள் | 1977 | கவிதை | த.கோவேந்தன் பதிப்பு |
37 | குறிஞ்சித்திட்டு | 1959 | காவியம் | |
38 | கேட்டலும் கிளத்தலும் | 1981 | கேள்வி-பதில் | ச. சு. இளங்கோ பதிப்பு |
39 | கோயில் இருகோணங்கள் | 1980 | நாடகம் | ச. சு. இளங்கோ பதிப்பு |
40 | சஞ்சீவி பர்வதத்தின் சாரல் | 1930 | காவியம் | பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
41 | சிரிக்கும் சிந்தனைகள் | 1981 | துணுக்குகள் | ச. சு. இளங்கோ பதிப்பு |
42 | சிறுவர் சிறுமியர் தேசியகீதம் | 1930 | கவிதை | |
43 | சுயமரியாதைச் சுடர் | 1931 | பாட்டு | கிண்டற்காரன் என்னும் புனைப்பெயரில் எழுதிய 10 பாடல்களைக் கொண்டது. குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படையல் |
44 | செளமியன் | 1947 | நாடகம் | |
45 | சேரதாண்டவம் | 1949 | நாடகம் | |
46 | தமிழச்சியின் கத்தி | 1949 | காவியம் | |
47 | தமிழியக்கம் | 1945 | கவிதை | ஒரே இரவில் எழுதியது |
48 | தமிழுக்கு அமிழ்தென்று பேர் | 1978 | கவிதை | த.கோவேந்தன் பதிப்பு |
49 | தலைமலை கண்ட தேவர் | 1978 | நாடகம் | ச. சு. இளங்கோ பதிப்பு |
50 | தாயின் மேல் ஆணை | 1958 | கவிதை | |
51 | தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு | 1930 | பாட்டு | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
52 | திராவிடர் திருப்பாடல் | 1948 | கவிதை | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
53 | திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் | 1949 | கவிதை | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
54 | தேனருவி | 1956 | இசைப்பாடல் | 1978ஆம் ஆண்டில் சென்னை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட த. கோவேந்தன் பதிப்பில் புதிய பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. |
55 | தொண்டர் வழிநடைப் பாட்டு | 1930 | பாட்டு | |
56 | நல்லதீர்ப்பு | 1944 | நாடகம் | |
57 | நாள் மலர்கள் | 1978 | கவிதை | த.கோவேந்தன் பதிப்பு |
58 | படித்த பெண்கள் | 1948 | நாடகம் | |
59 | பன்மணித்திரள் | 1964 | கவிதை | |
60 | பாட்டுக்கு இலக்கணம் | 1980 | இலக்கணம் | ச. சு. இளங்கோ பதிப்பு |
61 | பாண்டியன் பரிசு | 1943 | காவியம் | |
62 | பாரதிதாசன் ஆத்திசூடி | 1948 | கவிதை | |
63 | பாரதிதாசன் கதைகள் | 1955 | சிறுகதை | சிவப்பிரகாசம் பதிப்பு. புதுவை முரசு இதழில் வெளிவந்த 14 படைப்புகளின் தொகுப்பு |
64 | பாரதிதாசனின் கடிதங்கள் | 2008 | கடிதங்கள் | ச.சு.இளங்கோ பதிப்பு |
65 | பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி) | 1938 | கவிதை | |
66 | பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி) | 1949 | கவிதை | இ.பதிப்பு 1952 |
67 | பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி) | 1955 | கவிதை | |
68 | பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி) | 1977 | கவிதை | |
69 | பாரதிதாசன் நாடகங்கள் | 1959 | கவிதை | |
70 | பாரதிதாசனின் புதிய நாடகங்கள் | 1994 | நாடகங்கள் | ச.சு.இளங்கோ பதிப்பு |
71 | பாரதிதாசனின் புதினங்கள் | 1992 | புதினம் | ச.சு.இளங்கோ பதிப்பு |
72 | பாரதிதாசன் பேசுகிறார் | 1981 | சொற்பொழிவு | ச.சு.இளங்கோ பதிப்பு. |
73 | பாரதிதாசன் திருக்குறள் உரை | 1992 | உரை | ச.சு.இளங்கோ பதிப்பு |
74 | பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ் | 2012 | திரைக்கதை | ச.சு.இளங்கோ பதிப்பு. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்கள் பற்றிய ஆய்வும் பதிப்பும் |
75 | பிசிராந்தையார் | 1967 | நாடகம் | 1970ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றது. |
76 | புகழ்மலர்கள் | 1978 | கவிதை | த.கோவேந்தன் பதிப்பு |
77 | புரட்சிக் கவி | 1937 | கவிதை | பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
78 | பொங்கல் வாழ்த்துக் குவியல் | 1954 | கவிதை | |
79 | மணிமேகலை வெண்பா | 1962 | கவிதை | |
80 | மயிலம் சுப்பிரமணியர் துதியமுது | 1926 | இசைப் பாடல் | |
81 | மயிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம் | 1925 | கவிதை | |
82 | மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு | 1920 | இசைப்பாடல் | |
83 | மானுடம் போற்று | 1984 | கட்டுரைகள் | ச.சு.இளங்கோ பதிப்பு |
84 | முல்லைக்காடு | 1948 | கவிதை | |
85 | வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? | 1980 | இலக்கணம் | ச.சு.இளங்கோ பதிப்பு |
86 | வேங்கையே எழுக | 1978 | கவிதை | த.கோவேந்தன் பதிப்பு |