ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் – முகேஷ் அம்பானி அறிவிப்பு!!
சம்பள உயர்வு:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அஸ்திவாரமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் அதனைச் சார்ந்துள்ள வர்த்தக பிரிவில் வருமானம் குறைந்துள்ளது. இந்த சரிவுக்கு மிக முக்கியக் காரணம் ஊரடங்கு. அதனால் கச்சா எண்ணெய் தேவையும், நாட்டின் உற்பத்தியும் பெரிய அளவில் குறைந்துள்ளது. உற்பத்தி மற்றும் வர்த்தகம் குறைந்த காரணத்தால் O2C வர்த்தகப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சம்பள குறைப்பு, போனஸ், பேஅவுட் ஆகியவற்றுக்குத் தற்காலிக நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
மேலும் கொரோனா பாதிப்பு சூழ்நிலையிலும் ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜியோ மற்றும் ரீடைல் வர்த்தகப் பிரிவின் பங்குகளை விற்பனை செய்தது மூலம் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தைப் பெற்று முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக நம்பிக்கையைப் பெற்றது. இதனால் அதிகளவிலான வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் பெற்று வந்தது. இதன் காரணமாக 2020-21 ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் எதிர்பார்க்காத வகையில் 35 சதவீத வளர்ச்சியில் 53,739 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று உயர்ந்துள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முதல் கையெழுத்து – பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
ரிலையன்ஸ் நிறுவனம் டெலிகாம் வர்த்தகத்தில் சுமார் 75,000 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது. அதிக வளர்ச்சியை கொண்டாடும் வகையிலும், இலாபத்தின் காரணமாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் தனது 2 லட்சம் ஊழியர்களுக்குச் செயல்திறன் அடிப்படையிலான போனஸ் மற்றும் வேரியபில் பேஅவுட் ஆகியவற்றை அளிக்க முடிவு செய்துள்ளது. கடந்த 11 வருடமாக முகேஷ் அம்பானி எவ்விதமான சம்பள உயர்வும் இல்லாமல் தொடர்ந்து 15 கோடி ரூபாய் அளவீட்டிலேயே சம்பளத்தைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்