தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முதல் கையெழுத்து – பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை மக்களுக்கு அறிவித்துள்ளார். அவர் மே 7 ம் தேதி முதல்வராக பதவியேற்றவுடன் அவர் அறிவித்ததில் எந்த வாக்குறுதியை முதலில் கையெழுத்திட்டு அமல்படுத்துவார்? என மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதல் கையெழுத்து :
கடந்த ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சிகள் வாக்குகளை சேகரிக்க தேர்தல் பிரச்சாரங்களை நடத்தின. வாக்குறுதிகளை அறிவித்து ஓட்டுகள் கேட்பது வழக்கம். இதே போல் தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுக தேர்தலில் போது மக்களுக்கு பல வாக்குறுதிகளை அறிவித்தது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை தொகுதிகளில் வென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்க உள்ளர்.
வெற்றி பெற்ற அவர் தேர்தலின் போது பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் கிடையாது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய், 500 இடங்களில் கலைஞர் உணவகம், மகப்பேறு விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும். கல்விக் கடன் ரத்து, ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு போன்ற வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார். வெற்றி பெற்ற அவர் மே 7 ம் தேதி பதவியேற்க உள்ளார்.
நாடு முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு – எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தல்!!
இவர் முதல்வராக பதவியேற்றவுடன் இவர் அளித்த வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதிக்கு முதலில் கையெழுத்திட்டு அமல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இது தவிர ஒவ்வொரு தொகுதியிலும், பொது மக்களிடம் புகார் மனுக்களை ஸ்டாலின் வாங்கினார். ஆட்சி பொறுப்பேற்ற, 100 நாட்களில், இந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியையும் மக்களுக்கு அளித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்