ரத்ததானம் செய்பவரா ? தடுப்பூசி போடுவதற்கு முன் இதை மறக்க வேண்டாம் !
இந்தியாவில் தற்போது 18 வயதில் இருந்து 44 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த தானம் செய்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பாக ரத்த தானம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தொடர்ச்சியாக வேகமெடுத்து வருகின்றது. இதனால் மக்கள் அனைவரும் கூடிய விரைவாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனை அடுத்து கடந்த இரு நாட்களுக்கு முன்பாக 18 வயதில் இருந்து 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் ஆரம்பித்துள்ளன.
இந்தியாவில் 150 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு? மத்திய அரசு அறிவுறுத்தல் !!
இது இப்படியாக இருந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் அடுத்து வரும் 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் ரத்த மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ரத்தம் செலுத்தப்பட வேண்டிய நோயாளிகள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த தானம் செய்பவர்கள் இதனை கருத்தில் கொண்டு தடுப்பூசி போட்டு கொள்வதற்கு முன்பாக ரத்த தானம் செய்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
சமூகவலைத்தளங்களில் இது குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று தன்னார்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த செய்தியினை அனைவருக்கும் பகிர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.