இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகள் ஒத்திவைப்பு – பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
கொரோனா பரவல் காரணமாக காஷ்மீர் பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை தேர்வுகள் மே 2 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் முக்கிய வாளகங்கள் ஏப்ரல் 28 வரை மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
கொரோனா இரண்டாம் அலை இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் நடைமுறைப்படுத்தி உள்ளன. பல மாநில அரசுகள் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். வட மாநிலங்கள் தற்போது கொரோனோவின் கோரப்பிடியில் சிக்கி கொண்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று முதல் மே 3 வரை முழு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!!
இதனால் பல்வேறு துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து காஷ்மீர் பல்கலைக்கழகம் தங்களது பல்கலைக்கழகத்தில் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் செமஸ்டர் தேர்வை மே 2ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
கே.யூ யு.ஜி மற்றும் பி.ஜி தேர்வுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாகங்கள் ஏப்ரல் 28 வரை மூடப்பட்டிருக்க்கும் எனவும் தெரிவித்துள்ளது.