நாடு முழுவதும் 18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – ஏப்ரல் 28 முதல் விண்ணப்ப பதிவு!!
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 1 ஆம் தேதிக்கு பிறகு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் அனைவரும் கோ-வின் வலைதளத்தில் ஏப்ரல் 28 முதல் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடுவதும் கட்டாயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மே 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 44 வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பாரதியார் பல்கலை செமஸ்டர் தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு!!
இந்நிலையில் தற்போது தடுப்பூசி போட கோ-வின் வலைத்தளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரம் 45 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள் முன்பதிவு செய்யாமல் நேரடியாக தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை எச்சரிக்கை!!
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், “அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்கும் போது தடுப்பூசியின் தேவை பல மடங்குகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள விரும்பும் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் கோ-வின் வலைத்தளத்தில் ஏப்ரல் 28 முதல் பதிவு செய்ய வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.