அண்ணா பல்கலை மாணவர்களுக்கு புதிய தேர்வு முடிவுகள் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாணவர்களுக்கும் தேர்வின் முடிவில் திருப்தி இல்லாத காரணத்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் அச்சம் நிலவுகிறது. இதனால் தேர்வு முடிவுகளை மறு பரிசீலினை செய்து வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வுகள்:
கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றின் பரவல் தமிழகத்தை அச்சறுத்தி வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படவில்லை. இதனால் அண்ணா பல்கலையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் முறை தேர்வு என்பதால் மாணவர்களுக்கு பல தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
ஏப்ரல் 25 முதல் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!!
தேர்வில் குழப்பம்:
தேர்வுகள் இணைய வழியில் நடக்கும் போது திரையில் ஏதேனும் நகர்வுகள் தென்பட்டாலோ, திரையில் இருந்து வெளியில் வந்தாலோ, ஏதேனும் ஒளி, ஒலி வந்தாலோ தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்படும். தேர்வு எழுதும் போது மாணவர்கள் இணையத்தில் பல தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்தனர். இயற்கையாக ஒளி, ஒலி வந்தால் கூட மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை கூட தோல்வி அடையாத மாணவர்கள் பலரும் தோல்வி அடைந்துள்ளனர்.
மறுதேர்வு முடிவுகள்:
பல மாணவர்கள் இதனால் தற்கொலைக்கு முயன்றுள்ள நிலையில், ஒரு மாணவி மரணமடைந்துள்ளார். இந்த தேர்வு முடிவுகளினால் பல பொறியியல் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தேர்வு முடிவில் உள்ள குழப்பங்களை நீக்கி, மறுதேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
உண்மையான செய்தி…மீண்டும் தேர்வு வெளியீடு நடத்த பட வேண்டும்