சிலம்ப கலைக்கு மத்திய அரசு அங்கீகாரம் – சம்மேளன நிறுவனர் தகவல்!!
தமிழர்களின் பாரம்பரியமான சிலம்ப கலைக்கு மத்திய அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது. இதனால் இந்த கலையின் மூலம் வீரர்களுக்கு பல அரசு சலுகைகள் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு அங்கீகாரம்:
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்று சிலம்பம். பொதுவாக இந்த கலையை கற்றுக்கொள்வதற்கு பல பயிற்சிகள் தேவை என்பதால் இதை கற்றுக்கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இருந்தாலும் தமிழகத்தின் பாரம்பரிய, பழமையான கலையான சிலம்ப கலைக்கு தற்போது மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதுகுறித்து சிலம்ப சம்மேளன நிறுவனர் செல்வராஜ் கூறுகையில், ‘சிலம்ப கலைக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் சிலம்பக்கலை மத்திய அரசின் ஃபார்ம் 2 என்ற தகுதி சான்றிதழை பெறுகிறது. மற்ற விளையாட்டு வீரர்கள் பெறும் அனைத்து சலுகைகளும் சிலம்ப வீரர்களுக்கும் கிடைக்கும். அதன்படி சிலம்ப வீரர்களுக்கு இந்திய அளவில் மேல்படிப்பு, வேலையில் இட ஒதுக்கீடு, அரசு வேலையில் முன்னுரிமை ஆகிய சலுகைகள் கிடைக்கும்.
கொரோனா வைரஸ் காற்றில் பரவும் – புதிய ஆய்வில் உறுதியான தகவல்!!
மேலும் சிலம்பம் தொடர்பான போட்டியில் கலந்து கொள்ள வெளி மாநிலங்கள் செல்லும் வீரர்களுக்கு போக்குவரத்து கட்டணம் உட்பட பல சலுகைகளுடன் அங்கீகாரமும் கிடைக்கும்’ என தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிலம்ப விளையாட்டை கேலோ இந்தியா யூத் கேம் மற்றும் கேலோ யுனிவர்சிட்டி போன்ற விளையாட்டுடன் இணைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.