கொரோனா வைரஸ் காற்றில் பரவும் – புதிய ஆய்வில் உறுதியான தகவல்!!
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் மற்றவர்களுக்கு பரவுகிறது என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் காற்றில் பரவும் தன்மை உடையது என தற்போது உறுதியான ஆய்வு தகவல்கள் கூறுகிறது.
காற்றில் பரவும் கொரோனா:
2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவியது. இந்த வைரஸ் தாக்கப்பட்ட ஒருவரது இருமல் மூலமாகவோ, தும்மல் மூலமாகவோ மற்றவர்களுக்கு பரவியிருப்பது தாமதமாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் முன்னதாகவே பல உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியிருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு முழுவதும் உலக நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்தும், மக்கள் கூடுவதை தடை செய்ய பொது முடக்கத்தை அமல்படுத்தியும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.
TN Job “FB Group” Join Now
ஆனால் எந்தவொரு கட்டுப்பாடுகளும் கொரோனாவை தடுக்கவில்லை. அதன் தாக்கத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் மடிந்தனர். இந்த வைரஸின் தீவிரத்தை கண்டு வல்லரசு நாடுகளே திகைத்துப்போயினர். காலப்போக்கில் கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. அதன் பின்னரே மக்கள் வழக்கம் போல நடமாட துவங்கினர். இந்நிலையில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மீண்டுமாக உலக நாடுகளை தாக்க துவங்கியது. இந்த உருமாறிய வைரஸ் காற்றின் மூலமும், கண்கள் வழியாகவும் மற்றொருவருக்கு பரவக்கூடியது என கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் ஒரே நாளில் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா – 1341 பேர் உயிரிழப்பு!!
இதன் பின்பாக உலக சுகாதார அமைப்பின் அறிவுரையின் படி ஒவ்வொரு நாட்டிலும் கொரோனவை தடுக்க கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா காற்றின் மூலம் பரவாது என்று பலரது தரப்பிலிருந்து கூறப்பட்டு வந்தது. இப்படி இருக்க கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது என லான்சென்ட் மருத்துவ இதழின் புதிய ஆய்வு உறுதியான தகவலை தெரிவித்துள்ளது. இதை கவனத்தில் கொண்டு மக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.