தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
வாக்குப்பதிவு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்றது. 39 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த முறை தேர்தலில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால் நடந்து முடிந்த வாக்குபதிவில் 69.46 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர். மீதமுள்ள 4 கோடி 32 லட்சத்து 97 ஆயிரத்து 144 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மீதமுள்ள 1 கோடியே 90 லட்சத்து 36 ஆயிரத்து 781 பேர் வாக்களிக்கவில்லை.
IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200/- சம்பளத்தில் வேலை – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!
குறிப்பாக வடசென்னையில் வெறும் 60.13 சதவீதம் பேர் தான் வாக்களித்தனர். அதாவது 14 லட்சத்த 96 ஆயிரத்து 224 பேரில், 8 லட்சத்து 99ஆயிரத்து 679 பேர் மட்டுமே வாக்களித்தனர். மீதமுள்ள 5 லட்சத்து 96 ஆயிரத்து 545 பேர் வாக்களிக்கவில்லை. வெள்ளிக்கிழமை விடுமுறை தினத்தில் வாக்குப்பதிவு நடத்தியதால் தான் பலர் வாக்களிக்கவில்லை என பாஜக வேட்பாளர் தமிழிசை கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.