தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? தலைமை செயலர் ஆலோசனை!
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் நாளை உயர் அதிகாரிகளுடன் முக்கிய நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தீவிரமாக பரவத் தொடங்கிய கொரோனா ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வர தொடங்கியது. இதனால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. பொதுமக்களும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக கொரோனா 2வது அலை வீச தொடங்கியுள்ளது. இதனால் நாள்தோறும் தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல் 10ம் தேதி முதல் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் நோய்த்தொற்று உயர்ந்து கொண்டே வருகிறது. பிற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடும் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே தமிழகத்திலும் கொரோனா பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இரவு நேர ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் கொரோனா பரவல், தடுப்பூசி விநியோகம் மற்றும் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்