அண்ணா பல்கலை தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு – மாணவர்கள் அதிர்ச்சி!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 30 ஆயிரம் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செமஸ்டர் தேர்வுகள்:
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டது. அதேபோல அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்றது. இதன்படி பொறியியல் படிப்புகளின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதினர்.
TN Job “FB Group” Join Now
இந்த தேர்வுகளின் இறுதி முடிவுகள் கடந்த 11 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் பல மாணவர்களுக்கு WH (With held) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது WH (With held) குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி என்றோ, Fail என்றோ குறிப்பிடப்படாமல் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WH1 என்று குறிப்பிடப்பட்டால் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், WH6 என்றால் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்றும், WHRX என்றால் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறும்போது, ‘கொரோனா பரவல் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழியில் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதில் 2 மதிப்பெண்கள் கொண்ட 15 கேள்விகளும், 1 மதிப்பெண் கொண்ட 30 கேள்விகளும் சேர்த்து மொத்தமாக 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த தேர்வுகளில் கொடுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாத மாணவர்கள் தேர்வில் முறைகேடுகள் செய்ததாக கருதப்படும்.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
அதன்படி சுமார் 1 லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து பொறியியல் மாணவர்கள் கூறும் போது, ‘செமஸ்டர் தேர்வுகளை பல மாணவர்கள் செல்போன் மூலம் எழுதினார்கள். பலரது வீடுகளில் தேர்வு எழுத தனி அறை இருக்காது. அதனால் சில இடைஞ்சல்கள் ஏற்பட்டிருக்கலாம். அதை முறைகேடாக கருதுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல’ என தெரிவித்துள்ளனர்.
Yes middle cls family la ulla students yepdi thani room irukkum so avangaluku disturb irukkatha seiyum