தமிழகத்தில் புதிதாக 6984 பேருக்கு கொரோனா தொற்று – 18 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமெடுத்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 6,984 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. இதனால் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் 2 வாரங்களாக தினசரி கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனையொட்டி ஏப்ரல் 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இன்று சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 6984 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,47,129 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18 பேர் பலியாகி உள்ளதால், மொத்த உயிரிழப்புகள் 12,945 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி 3,289 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 8,84,199 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 2,482 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,69,614 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
தற்போது வரை 2,06,86,440 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 49,985 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்