7வது ஊதியக் குழு அகவிலைப்படி – மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக சலுகை!!
மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள 7வது ஊதியக் குழுவின் அறிவிப்புகளின் படி, அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் கிடைக்க உள்ளது. அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி:
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வழங்கப்படாமல் இருந்தது. கொரோனா பாதிப்பு ஊரடங்கு காரணத்தினால் வரும் ஜூலை 1ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்பட்ட தொகையுடன் சேர்த்து வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
தேசிய கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்பு – 120 காலிப்பணியிடங்கள்!!
ஜூன் மாதத்திற்கான அகவிலைப்படியுடன் சேர்த்து மொத்தம் 28% DA வழங்கப்பட உள்ளது. இதனால் உதாரணமாக ஒருவரது மாத ஊதியம் ரூ.21,000 ஆக இருந்தால் அவரது பழைய DA ரூ.3,570 ஆக இருக்கும். ஆனால் 28% உயர்த்தப்பட்ட DA வின் படி, அவரது DA ரூ.5880 ஆக கிடைக்கும்.
பயணப்படி:
மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படியானது எப்போதும் அகவிலைப்படியை சார்ந்தே உள்ளது. அகவிலைப்படி அதிகரித்து உள்ளதால் பயணத்திற்கான படியும் அதிகரித்து உள்ளது. உயர்த்தப்பட்ட பயணப்படி 2021 ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும்.
வருங்கால வாய்ப்பு நிதி:’
7வது ஊதிய கமிஷன் கட்டண விதிகளின் படி, மத்திய அரசின் பி.எப் பங்களிப்பானது அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ அடிப்படியில் தான் கணக்கிடப்படும். DA உயர்வை தொடர்ந்து பிஎப் தொகையும் உயரும். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும்.
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – முதல்வர் கோரிக்கை!!
2021ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் DA தொகை வழங்கப்படும் பொழுது இதனால் சுமார் 52 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதில் 58 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். DA தொகையில் மாற்றம் வரும் போது, ஓய்வூதியதாரர்களுக்கு DR தொகையிலும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Pl with out govt order pl dont give such msges. So the we are not beliving the govt.Specialy finance minister & Pm.They may hurt the govt employes specially Army,defence & Exservicemen,
எதுக்கு இப்படி மக்களின் வரிப்பணத்தை அரசு நிர்வாகம் லஞ்ச ஊழலில்திளைத்திருக்கும் ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கும் அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டே போகுது????
Why all these rumoured news. Pls if you can give us or publish the orders from DOPT if any. Agree with Mr. S. Mani as he said above