இரவு ஊரடங்கிற்கு பதில் வேலை நேரத்தை மாற்றலாம் – சி.ஏ.ஐ.டி கோரிக்கை!!
நாட்டில் கொரோனா தொற்று வேகமடையும் நிலையில் அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சி.ஏ.ஐ.டி இரவு நேர ஊரடங்கிற்கு பதில் வேலை நேரத்தில் மாற்றம் செய்ய என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இரவு ஊரடங்கு:
கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறையினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். மேலும் சில மாநிலங்களில் அந்த மாநிலத்தின் நிலைக்கேற்ப இரவு நேர ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டில் கொரோனா அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
தற்போது இது குறித்து சி.ஏ.ஐ.டி பிரதமருக்கு ஓர் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சி.ஏ.ஐ.டி கூறியதாவது, நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கு மாறாக வேலை நேரத்தில் மாற்றம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. அதாவது, வெவ்வேறு துறைகளுக்கு மாற்று நேரத்தில் வேலையை அறிவிக்கலாம். சான்றாக கடைகள், சந்தைகள் போன்றவற்றிற்கு காலை 11 மணி முதல் மலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கலாம்.
தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா – மத்திய அரசு எச்சரிக்கை!!
மேலும் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் ஊழியர்களுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலை இயங்க அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதனை அனைத்து மாவட்டத்தில் அங்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு நிலவரத்திற்கேற்ப முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனால் பொருளாதார வீழ்ச்சி என்னும் நிலை ஏற்படாது.