சென்னையில் கூடுதல் செவிலியர்கள், மருத்துவர்கள் பணியமர்த்தம் – சுகாதாரத்துறை நடவடிக்கை!!
சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்று மிக தீவிரமாக கண்டறியப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு சுகாதாரத்துறை பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
கொரோனா நோய்பரவல்:
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த ஆண்டை விட மிக அதிகமான வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவில் போன்ற மதசார்ந்த திருவிழாவிற்கு தடை, திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி போன்ற பல நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழகத்தில் கொரோனா நிலைப்பாட்டை கண்டறிய அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகரத்தில் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் 2,105 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோவில் 50% கட்டண சலுகை – இன்றும், நாளையும்!!
கொரோனா பரவலை குறைக்கும் வகையில் சுகாதாரத்துறை நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி சென்னையில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியமர்த்தம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தற்காலிக பணிக்காக தற்போது இந்திய மருத்துவ கழகத்திடம் தமிழக சுகாதாரத்துறை பட்டியல் கேட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 150 மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.