CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாற்றம் இல்லை – தேர்வு துறை அறிவிப்பு!!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு தரப்பில் கட்டாயம் தேர்வுகள் மே 4 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1.45 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளன. கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் பொதுத்தேர்வை ஆன்லைன் மூலமாக நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில தரப்பில் இருந்து பொதுத்தேர்வை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நேரடி வகுப்புகள் ரத்து – தொலைநிலைக்கல்வி இயக்ககம் அறிவிப்பு !
இதுகுறித்து change.org-யில் 1 லட்சம் மாணவர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளனர். இது குறித்து சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ தேர்வு துறை வெளியிட்ட அறிவிப்பில், மே மாதம் 4 ஆம் தேதி எந்த மாற்றமும் இல்லாமல் கட்டாயம் தேர்வுகள் நடைபெறும் எனவும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் போது கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்க்கு கொரோனா – பள்ளியை மூடக்கோரி பெற்றோர்கள் முற்றுகை!!
மாணவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என 40-50 சதவீதம் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வுகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் கட்டாயம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்புக்கு ஆன்லைன் எக்ஸாம் வைக்கவும்