பல்கலைக்கழக நேரடி வகுப்புகள் ரத்து – தொலைநிலைக்கல்வி இயக்ககம் அறிவிப்பு !
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்படும் நேரடி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 5400க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்படும் நேரடி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஏப்ரல் மாதம் 10,11, 17,18 ஆம் தேதிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த தேதிகளில் நேரடி வகுப்புகள் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யபட்டுள்ளன.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்க்கு கொரோனா – பள்ளியை மூடக்கோரி பெற்றோர்கள் முற்றுகை!!
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அதிகாரபூர்வ இணையதளமான www.mkudde.org என்ற இணையதளத்தை காணலாம். மேலும் ஆன்லைன் வகுப்புகள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.