10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா பரவல் காரணமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளி வைத்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தேர்வுகள் தள்ளி வைப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்தது. தொடர்ந்து பொதுத்தேர்வுகள் எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு அறிவித்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே மாதம் 1 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் அறிவிக்கப்பட்ட தேதிகளில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 30 வரை அதிரடி சலுகை – பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு!!
இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் புபேஷ் பாகெல் அலுவலக ட்விட்டர் பதிவில், ‘சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இடைநிலை கல்வியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 3 முதல் 24 வரை நடைபெறும் என்பதில் எந்த மாறுதலையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்